ஏற்றுமதி அதிகரிப்பாலும், பருவமழையாலும் தமிழகத்தில் சின்ன வெங்காயம்
வரத்து குறைந்துள்ளது. இதனால், இதன் விலை, கிலோவுக்கு, 20 ரூபாய்
உயர்ந்துள்ளது. கர்நாடகா ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் சின்ன
வெங்காயம் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில், 2010-11ல்
வெங்காய சாகுப்படி பரப்பளவு, 33,800 ஹெக்டேராக இருந்தது. இதில், சின்ன
வெங்காயம் சாகுபடி பரப்பளவு, 70 சதவீதமாக இருந்தது.
கடந்தாண்டை விட, நடப்பாண்டு வெங்காயம் உற்பத்தி, அதிகரித்தது. மண்டிகளில் வரத்து அதிகரிப்பால், ஜனவரி முதல், ஏப்ரல் வரை, சின்ன வெங்காயத்தின் பண்ணை விலை கிலோவுக்கு, ஏழு முதல், 12 ரூபாயாக இருந்தது. மத்திய அரசு, வெங்காய விலை குறைந்து வருவதை தடுக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையிலும், சென்ற ஜூன் மாதம், வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நீக்கியது. ஏற்றுமதி வாய்ப்பு அதிகரிப்பால், சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து விட்டது.
அதே சமயம், தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்து விட்டது. மாநிலம் முழுவதும் பெய்த பருவமழையால், விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையால், இருப்பில் வைத்துள்ள சின்ன வெங்காயத்தில், 50 சதவீதம், கிடங்குகளிலேயே அழுகி விடுகிறது. தற்போது வெங்காயத்திற்கான தேவை உயர்ந்துள்ள நிலையில், அதற்கேற்ப வரத்து இல்லாததால், விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈரோடு, வெங்காய வியாபாரி ஷேக்மன்சூர் கூறியதாவது: கர்நாடகாவில், பெல்லாரி, தமிழகத்தில் பல்லடம், ராசிபுரம், தாளவாடி பகுதிகளிலும், ஆந்திராவிலும் சின்ன வெங்காயம் அதிகம் பயிரிடப்படுகிறது. கடந்த சில நாட்களாக உள்நாட்டில் பெய்து வரும் மழையால், வெங்காயம் விளைச்சல் பாதித்துள்ளது. இதனால், தமிழகத்தில் வரத்து குறைந்து, விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம், கிலோ 20 ரூபாய்க்கு விற்ற சின்ன வெங்காயம், 20 ரூபாய் அதிகரித்து, 35 – 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெரிய வெங்காயம், 12 ரூபாய்க்கு விற்றது, எட்டு ரூபாய் உயர்ந்து, 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இதன் விலை மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்தாண்டை விட, நடப்பாண்டு வெங்காயம் உற்பத்தி, அதிகரித்தது. மண்டிகளில் வரத்து அதிகரிப்பால், ஜனவரி முதல், ஏப்ரல் வரை, சின்ன வெங்காயத்தின் பண்ணை விலை கிலோவுக்கு, ஏழு முதல், 12 ரூபாயாக இருந்தது. மத்திய அரசு, வெங்காய விலை குறைந்து வருவதை தடுக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையிலும், சென்ற ஜூன் மாதம், வெங்காயத்திற்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை நீக்கியது. ஏற்றுமதி வாய்ப்பு அதிகரிப்பால், சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து விட்டது.
அதே சமயம், தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்து விட்டது. மாநிலம் முழுவதும் பெய்த பருவமழையால், விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையால், இருப்பில் வைத்துள்ள சின்ன வெங்காயத்தில், 50 சதவீதம், கிடங்குகளிலேயே அழுகி விடுகிறது. தற்போது வெங்காயத்திற்கான தேவை உயர்ந்துள்ள நிலையில், அதற்கேற்ப வரத்து இல்லாததால், விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈரோடு, வெங்காய வியாபாரி ஷேக்மன்சூர் கூறியதாவது: கர்நாடகாவில், பெல்லாரி, தமிழகத்தில் பல்லடம், ராசிபுரம், தாளவாடி பகுதிகளிலும், ஆந்திராவிலும் சின்ன வெங்காயம் அதிகம் பயிரிடப்படுகிறது. கடந்த சில நாட்களாக உள்நாட்டில் பெய்து வரும் மழையால், வெங்காயம் விளைச்சல் பாதித்துள்ளது. இதனால், தமிழகத்தில் வரத்து குறைந்து, விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம், கிலோ 20 ரூபாய்க்கு விற்ற சின்ன வெங்காயம், 20 ரூபாய் அதிகரித்து, 35 – 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பெரிய வெங்காயம், 12 ரூபாய்க்கு விற்றது, எட்டு ரூபாய் உயர்ந்து, 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இதன் விலை மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment