பெரிய வெங்காயம் உற்பத்தி முறைகள்

Wednesday, 4 July 20120 comments

விதை உற்பத்திக்கு ஏற்ற நிலத் தேர்வு

நிலத் தேர்வு செய்யும் போது முந்தைய பருவத்தில் வேறு இரக வெங்காயம் பயரிடப்படாத வயலைத் தேர்ந்தெடுத்தல் மிக அவசியம். இவ்வாறு செய்வதால் தான் தோன்றிப் பயிர்களால் ஏற்படும் இனக் கலப்பை தவிர்க்கலாம்.
இனத் தூய்மையை பராமரிக்க பயிர் விலகு தூரம்

வெங்காய இரகங்களில் வெங்காயத்தின் நிறம் மாறுபட்டிருந்தாலும், படத்தில் காண்பது போல தேனீக்கள் மற்றும் வேறு பல நன்மை செய்யும் பூச்சிகளால் அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்படுவதாலும் வெங்காயத்தில் இனத்தூய்மையை பாதுகாப்பது மிக அவசியம். எனவே, இப்பயிர்களில் பயிரிடப்படும் விதைப்பயிரானது பிற இரக வயல்களிலிருந்து குறைந்தது 500 மீட்டர் தூரம் தனித்துப் பயிரிட வேண்டும். இவ்வாறு தனித்துப் பயிரிடுவதால் இரகங்களின் பாரம்பரியத் தன்மை கெடாமல் பாதுகாக்க முடியும்.
விதை உற்பத்திக்கு ஏற்ற பருவம்

“பருவத்தே பயிர் செய்” என்பது பழமொழி. விதைப்பயிருக்கு இது மிகவும் பொருந்தும். விதைகளின் தரம் அது பயிரிடப்படும் சூழ்நிலைக்கு ஏற்ப அமைகிறது. வெங்காய விதை உற்பத்தி மற்ற காய்கறி பயிர்கள் விதை உற்பத்தியில் இருந்து மாறுபட்டது. ஏனெனில், வெங்காய விதை உற்பத்தி இரண்டு வெவ்வேறு பருவங்களில் செய்ய வேண்டியுள்ளது. ஒரு பருவத்தில் வெங்காயம் உற்பத்தி செய்யப்பட்டு, அவ்வெங்காயங்கள் மறுபடியும் நடவு செய்யப்பட்டு உண்மையான விதைகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. நாம் தேர்ந்தெடுக்கும் முதல் பருவம், நன்கு திரண்ட வளர்ச்சியுடன் வாழிப்பான நல்ல வெங்காயங்கள் உற்பத்திக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இரண்டாவது பருவம் நட்ட வெங்காயங்கள் மேலும் வளர்ச்சி பெற்று பூக்களை உருவாக்கவும் அப்பூக்களில் தரமான விதைகள் உருவாகவும் மிகவும் ஏற்றதாக இருக்கவேண்டும். இவ்விரு நிலைகளை கருத்தில் கொண்டு பார்க்கும் போது ஜ¤ன் - செப்டம்பர் வெங்காய உற்பத்திக்கும் அக்டோபர் - மார்ச் வெங்காய விதை உற்பத்திக்கும் ஏற்ற பருவங்களாகும். இப்பயிரில் பருவங்கள் மாறி சாகுபடி செய்தால் உணமையான விதைகள் உற்பத்தி செய்வது மிகவும் கடினம்.
Share this article :

Post a Comment

 
Created by agrisnet
Proudly powered by Agriculture information Media